Red banana benefits tamil
செவ்வாழை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்:-
செவ்வாழை நன்மைகள் (Red banana benefits tamil / use of sevvalai palam):
வாழைகளில் செவ்வாழை பார்க்க சிவப்பு நிறத்தில் தடிமனாகவும் சாப்பிட ருசியாக இருப்பதுடன் வாழைப் பழங்களில் அதிக அளவு சத்துக்கள் கொண்டது என்பதும் உண்மை. அதாவது இதன் மருத்துவ குணங்கள் மற்ற பழங்களைவிட அபாரமானது உண்மையில் இயற்கை கொடுத்த அற்புதங்களில் மிக மிக முக்கியமானது. ஏனோ தெரியவில்லை இது எல்லா இடங்களிலும் எளிதாக கிடைத்தாலும் இதன் அபார நன்மைகள் நிறைய பேருக்குத் தெரியவில்லை என்று சொல்லவேண்டும் அந்தவகையில் நாம் பார்க்கப்போவது செவ்வாழையை அடிக்கடி சாப்பிட்டால் என்னென்ன நன்மைகள் நமக்குக் கிடைக்கும், இது எந்த நோயை குணப்படுத்தும் யார்யார் அவசியம் சாப்பிட வேண்டும், தினமும் ஒன்று சாப்பிட்டால் என்ன நன்மைகள் கிடைக்கும், எடை அதிகம் உள்ளவர்கள், சர்க்கரை நோயாளிகள் இது சாப்பிடலாமா இது போன்ற பல சந்தேகங்களுக்கு தீர்வு பின்வருமாறு பாப்போம்.
ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கும்:
ஒரு மனிதன் ஆரோக்கியமாக இருப்பதை அவன் சுறுசுறுப்பாக இருப்பதை வைத்துத் தெரிந்து கொள்ளலாம். அதே சமயத்தில் அவன் சுறுசுறுப்பாக இருக்க உடலில் ஹீமோகுளோபின் எண்ணிக்கையும் போதுமானதாக இருக்க வேண்டும். ஹீமோகுளோபின் அளவு குறைவாக இருந்தால் எந்த செயல் செய்யவும் நாட்டம் ஏற்படாது அதாவது எந்த ஒரு செயலை ஆரம்பிக்கும் முன்பே அது தள்ளிப்போடும் மனநிலை முன்னால் நிற்கும். அதனால் எதிலும் வெற்றி பெறுவது இயலாத காரியம். பொதுவாக ஹீமோகுளோபின் எண்ணிக்கையை அதிகரிக்க நாம் சாப்பிடும் உணவில் உள்ள இரும்புச்சத்தை உறிஞ்சு கொள்ள விட்டமின் சியும் மிக முக்கியம். அந்த வகையில் இந்த ரெண்டுமே செவ்வாழையில் ஏராளமாக உள்ளதால் தினமும் ஒரு செவ்வாழை சாப்பிட்டு வந்தால் ரத்தத்தில் ஹீமோகுளோபின் எண்ணிக்கை அதிகரித்து இரத்த சோகை ஏற்படாமல் நம்மால் எப்பொழுதும் சுறுசுறுப்பாக இருக்க முடியும்.
எலும்புகள் வலிமை அடையும்:
மேலும் செவ்வாழை பயன்கள் (Sevvalai pazham Benefits) விட்டமின் சி நமது சருமம், முடி மூட்டு மற்றும் உடலின் ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியம். முக்கியமாக நம் உடல் நோய் எதிர்ப்பு சக்தியை பெற விட்டமின் சி தேவை. சொல்லப்போனால் மனிதனின் உடலுக்கு தினமும் தேவையான விட்டமின் சி அளவில் 16 சதவீதம் ஒரு செவ்வாழையில் கிடைக்கிறது. இது எலும்புகளில் கால்சியத்தை தக்க வைக்க உதவும். அதனால் தான் குழந்தைகள் வயதானவர்கள் செவ்வாழையை தினமும் ஒன்று சாப்பிட்டு வருவது நல்லது என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள். முக்கியமாக குழந்தைகளின் எலும்பு வளர்ச்சிக்கு அதிகம் தேவைப்படும். எனவே வளரும் குழந்தைகள் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க தினமும் ஒரு செவ்வாழை சாப்பிட பழகுங்கள்.
நரம்பு தளர்ச்சி பிரச்சனைக்கு:
நரம்பு நன்றாக இருந்தால் நாம் செய்ய நினைக்கும் செயலையும் சிறப்பாக சுறுசுறுப்பாக செய்ய முடியும். பொதுவாக நரம்புத்தளர்ச்சி கொண்டவர்களில் கை கால்கள் நடுக்கம் ஏற்படும். முக்கியமாக ஆண்மை குறைபாடு ஏற்படும். இன்றைய பழக்க வழக்கங்களாலும் முறையற்ற உணவு முறையாலும் ஆண்மை குறைபாடு அதிகரித்து வருகிறது. அவர்களுக்கு இந்த செவ்வாழை இயற்கை கொடுத்த வரப்பிரசாதம் என்று சொல்லலாம் எனவே திருமணமாகி பல ஆண்டுகளாகியும் குழந்தை இல்லாத தம்பதிகள் தினமும் ஒரு செவ்வாழை தொடர்ந்து 48 நாட்களுக்கு சாப்பிட்டு வந்தால் உடலில் உயிர் சக்தி அணுக்கள் போதுமான அளவில் பெருகி நிச்சயமாக கருத்தரிக்கும் வாய்ப்புகள் அதிகம் என்றும் கூறப்படுகிறது.
கண் பார்வை பிரச்சனைக்கு:
செவ்வாழை பயன்கள்(sevvazhai nanmaigal tamil) தினமும் செவ்வாழை சாப்பிடுவதினால் இதில் உள்ள பீட்டா கரோட்டின் உடலினுள் செல்லும் பொழுது விட்டமின் ஏ ஆக மாற்றப்பட்டு கண்களில் ஆரோக்கியத்தையும், நோய் எதிர்ப்பு மண்டலத்தின் வலிமையையும், சருமத்தில் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும் எனவே தினமும் ஒரு செவ்வாழை சாப்பிட்டு வந்தால் கண்கள் ஆரோக்கியம் மேம்படுவதோடு, பார்வை கோளாறுகள் ஏற்படாமல் தடுத்து, கண் பார்வைத் திறனையும் அதிகரிக்கும். இது கண்களில் கண்புரை ஏற்படுவதை தடுக்கிறது. மேலும் விழிப்படலம் நலத்தையும் மேம்படுத்துகிறது. அதேபோன்று மாலைக்கண் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இரவு உணவுக்குப் பிறகு தொடர்ந்து 40 நாட்கள் செவ்வாழை சாப்பிட்டு வந்தால் மாலைக்கண் நோய் குணமாகும். மேலும் எந்த வயதினராக இருந்தாலும் கண் பார்வை குறைபாடு இருந்தால் அவர்கள் தினமும் ஒரு செவ்வாழை சாப்பிட்டு வந்தால் கண் பார்வை கொஞ்சம் கொஞ்சமாக தெளிவடையும்.
பல் வலி குணமாக:
தினமும் செவ்வாழை சாப்பிடுவதினால் இதில் உள்ள விட்டமின் ஏ சத்து உடலுக்கு தேவையான ஆற்றலை அளிக்கிறது. மேலும் பல்வலி, பல்லசைவு போன்ற பல நோய்களையும் குணமாக்கும் சக்தி கொண்டுள்ளது. பல் தொடர்புடைய நோய்கள் ஏற்பட்டால் தொடர்ந்து 21 நாட்களுக்கு செவ்வாழை சாப்பிட்டு வர ஆடிய பல் கூட கெட்டிப்படும். மேலும் ஈறுகளில் வீக்கம், ரத்தம் வடிதல், பற்கூச்சம், பற்களில் சொத்தை ஏற்படுவது, வாய் மற்றும் பற்களில் கிருமி பிரச்சினைகள் ஏற்பட்டவர்கள் தினமும் ஒரு செவ்வாழை சாப்பிட்டு வந்தால் பற்களின் ஒட்டு மொத்த ஆரோக்கியமும் மேம்படும்.
வயிற்று பிரச்னை சீராகும்:
செவ்வாழையில் நார் சத்து அதிகம் உள்ளது அதாவது ஒரு செவ்வாழையில் 4 கிராம் அளவுக்கு நார்ச் சத்து நிறைந்துள்ளது. இது நம் உடலுக்கு முக்கிய தேவையான கரையும் நார் சத்தாகும். பொதுவாக தினமும் ஒரு செவ்வாழை சாப்பிட்டு வந்தால் அஜீரணக் கோளாறு ஏற்படாது. மலச்சிக்கல் இருப்பவர்கள் மூலநோய் குறைபாடு உள்ளவர்கள் தினமும் ஒரு வாழைப்பழம் சாப்பிட்டு வந்தால் அந்த குறைபாடுகளில் இருந்து விடுபடலாம். பொதுவாக மலச்சிக்கல் வந்தாலே நமது உடலில் பல சிக்கல் வந்துவிடுகிறது. எனவே தினமும் ஒரு செவ்வாழை பழம் இரவு உணவிற்குப் பிறகு ஒரு மணி நேரம் கழித்து சாப்பிட்டு வந்தால் செரிமான மண்டலத்தில் உள்ள பிரச்சனைகள் நீங்கி மலச்சிக்கல் வாயுத் தொல்லை வராமல் தடுக்கலாம். நெஞ்சு எரிச்சலால் அவதிப்படுபவர்கள் தினமும் ஒரு செவ்வாழை சாப்பிட்டு வந்தால் நெஞ்செரிச்சல் பிரச்சனை நீங்கும் ஏனென்றால் இதில் இயற்கையாகவே ஆன்டாசிட் தன்மை உள்ளது.
உள் உறுப்புகளை சுத்தம் செய்கிறது:
முக்கியமாக செவ்வாழை பழங்களில் பொட்டாசியம் சத்து அதிகம் நிறைந்து உள்ளது இந்த பொட்டாசியம் உடலில் இருக்கும் இரத்த நாளங்களில் இறுக்கத் தன்மை ஏற்படாமல் தடுப்பதால் உடல் முழுவதும் இரத்த ஓட்டம் சீராக இருக்கும். மேலும் இந்த ரத்த அழுத்தத்தை சீரான நிலையில் வைத்து இதற்கு சரியான அளவில் ரத்தம் சென்று வருவதால் இதய நோய்கள் ஏற்படுவது தடுக்கப்படும். மேலும் சிறுநீரகக் கற்கள் உருவாவதை தடுக்கக் கூடியது. அதேபோன்று கர்ப்பிணிப் பெண்கள் தினமும் ஒரு செவ்வாழை சாப்பிட்டு வந்தால், இதில் அதிகம் இருக்கும் பொட்டாசியம் தாய் மற்றும் வயிற்றில் வளரும் குழந்தைக்கு ஆரோக்கியத்தை கொடுக்கக்கூடியது. அதுபோன்று சிலருக்கு கல்லீரல் வீக்கம் ஏற்படுகிறது. இந்தப் பிரச்சினையை சரி செய்வதில் செவ்வாழை சிறப்பாக செயல்படுகிறது. தினமும் ஒரு செவ்வாழை சாப்பிட்டு வந்தால் கல்லீரல் இருக்கும் கிருமிகள் மற்றும் நச்சுகள் நீங்கி கல்லீரல் வீக்கம் குணமாகும்.
உடலுக்கு தேவையான சக்தியும் சுறுசுறுப்பும் தர வல்லது:
தினமும் காலையில் ஒரு செவ்வாழை சாப்பிட்டு வந்தால் நாள் முழுவதும் சுறுசுறுப்பு உற்சாகம் நிறைந்திருக்கும். மூளை எப்போதும் விழிப்புணர்வுடன் இருக்க செய்வதில் மிக சிறந்தது. இதனால் சோம்பலை தவிர்க்கமுடியும் முக்கியமாக செவ்வாழையை சாப்பிட்ட உடனேயே உடலுக்கு உடனடி சக்தி கிடைக்கும். எனவே விளையாட்டு வீரர்கள் உடல் உழைப்பு உள்ளவர்கள் மற்றும் உடற்பயிற்சி செய்பவர்கள் தினமும் ஒரு செவ்வாழை சாப்பிட்டு தங்கள் வேலையை தொடர்ந்தால் அவர்களின் செயல்திறன் அதிகரிக்கும். எனவே தினமும் ஒரு செவ்வாழை சாப்பிட்டு வந்தால் எப்பொழுதும் சுறுசுறுப்புடன் புத்துணர்ச்சியாக இருக்க முடியும். அதே போன்று எடை அதிகம் உள்ளவர்கள் கலோரிகள் அதிகம் நிறைந்த உணவுப் பொருட்களை எடுக்கக் கூடாது. ஆனால் செவ்வாழையில் மற்ற வாழைப்பழங்களை விட கலோரிகள் மிகவும் குறைவு. உண்மையில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை யார் வேண்டுமானாலும் சாப்பிடலாம். சர்க்கரை நோயாளிகளைப் பொறுத்த வரையில் இதில் உள்ள நார்ச்சத்து இரைப்பை மற்றும் சிறுகுடலில் கார்போஹைட்ரேட் குளுக்கோஸாக மாற்றப்பட்டு ரத்தத்தில் குளுக்கோஸ் திடீரென அதிகரிப்பதையும் செவ்வாழை தடுப்பதால் சர்க்கரை நோயாளிகள் வாரத்தில் இரண்டு முறை சாப்பிடலாம். அதேசமயம் செவ்வாழை சாப்பிடும் பொழுது அரிசி, கோதுமை போன்ற கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. உண்மையில் செவ்வாழையை அடிக்கடி சாப்பிட்டு வருபவர்களின் உடலில் நோய் எதிர்பாற்றல் அதிகரிக்கும், தொற்று நோய்கள் நெருங்காது இதனால் நோயின்றி ஆரோக்கியமாக வாழ முடியும். எனவே நீங்களும் சாப்பிட்டுப் பாருங்கள் நல்ல மாற்றத்தை நீங்களே உணர்வீர்கள் நன்றி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக